2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தேசிய மாணவர் படையணியின் படைநாள் நிகழ்வு

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


20 ஆவது தேசிய மாணவர் படையணியின் படைநாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

20 ஆவது தேசிய மாணவர் படையணியின் கட்டளை அதிகாரி கமகே தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கலந்துகொண்டு தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டடார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், தேசிய மாணவர் படையணியின் மேல்மாகாண கட்டளை அதிகாரி, வடாமகாண கல்விப் பணிப்பாளர் வெ.செல்வரசா, யாழ்.மாவட்ட புனர்வாழ்வு அதிகாரி மேஜர் புஷ்ப குமார, தேசிய மாணவர் படையணியின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு மாணவர் மத்தியில் உரையாற்றிய வடமாகாண ஆளுனர், 1881 ஆம் ஆண்டு இலங்கையில் இந்த மாணவர் படையணி உருவாக்கப்பட்தாகவும் 24 பிரிவுகளைக் கொண்டு இது செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் வடமாகாணத்தில் 60  பாடசாலைகளில் இந்த தேசிய மாணவர்கள் படையணி செயற்பட்டு வருகினறது என்றும் இதன் மூலம் மாணவர்கள் சிறந்த ஒழுக்கத்தை பெற்று மிகவும் உற்பத்தித் திறன்கொண்டவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .