2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ்.பல்கலை விரிவுரையாளருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மே 30 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, கு.சுரேன்


யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மணிநேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர் ஒருவருக்கு எதிராகவே மாணவர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை இன்று காலை 10.00 மணியிலிருந்து முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு எதிரான பல்வேறு வாசங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த விரிவுரையாளரின்  கொடும்பாவிக்கு பல்வேறு கொடுமைகளை செய்ததுடன், கொடும்பாவியை பெற்றோல் ஊற்றி எரித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கல்வி கற்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுப்பதாக கூறி மாணவஇ மாணவிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .