2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் மாநாடு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்தில் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

இதன்போது  வேலையற்ற பட்டதாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தங்களது நியமனங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்தனர்.

இந்த மாநாட்டில் யாழ். மாவட்ட  கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .