2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஜனாதிபதி விருதுக்கு சாகித்தியன் தெரிவு

Menaka Mookandi   / 2013 ஜூன் 04 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் தங்கமயில் சாகித்தியன், ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய ரீதியில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் கனிஸ்ட பிரிவில் கலந்துகொண்டு இந்த மாணவன் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டதாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.சுப்பிரமணியேஸ்வரன் தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்றமைக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு நாளை புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அதற்கான அழைப்பு பாடசாலைக்கு அதிபர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .