2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வடக்கு ஆளுநருடன் இந்திய எம்.பிக்கள் சந்தித்துப்பேச்சு

Kanagaraj   / 2013 ஜூன் 05 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியைச் சந்தித்து வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

ஆளுநர் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுரெஸ் பாபு ஆகியோரும் இவர்களுடன்இ இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப் மற்றும் இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்திய குழுவினருக்கு ஆளுநர் விளக்களித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவன்இஅமைச்சுக்களின் செயலாளர்கள்இ வடமாண அமைச்சுக்களின் கீழ் உள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .