2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பி ஓடியவர்களில் இருவர் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 07 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா. நவரத்தினராசா

கைதடி சிறுவர் இல்லத்தில் இருந்து 3 மூவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி. எம். ஜெவ்ரி தெரிவித்தார்.

யாழ். கைதடி பகுதியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையம் ஒன்றில் தாய் தந்தையரை இழந்த சிறுமி உட்பட இரு யுவதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த இல்லத்தினை விட்டு ஓடிச் சென்றுள்ளனர்.

மேற்படி, நபர்கள் தொடர்பாக பாதுகாப்பு நிலையத்தினர் தேயடிதுடன், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை, இல்லத்தினை விட்டு வெளியேறிய மூவரில் ஒரு சிறுமியும், ஒரு யுவதியும் முல்லைத்தீவு நன்னடத்தை உத்தியோகத்தர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாருக்கும், கைதடி சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 15 வயது சிறுமியும், 21 வயது யுவதியும், சாவகச்சேரி பொலிஸாரினால் யாழ். சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, மீண்டும் சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும், மற்றைய யுவதி தொடர்பான தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .