2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் சிங்கள குடிசன மதிப்பீடு ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரட்ணராசா

யாழ். மாவட்டத்தில் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் யாழ்.மாவட்ட செயலகம் ஈடுபட்டு வருகின்றது.

யாழ். மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிங்கள மக்கள் தொடர்பான விபரங்களுமே சேகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பான சுற்றுநிரூபம் யாழ்.மாவட்ட பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தற்போது குறிப்பிட்ட விபரங்களை பெறுவதில் கிராம அலுவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனாலும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான விபரங்களை பெறுவதில் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் பற்றிய விபரம் தெரிந்த முதியவர்கள் இல்லை என்றும் கிராம அலுவலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், பெருமளவான கிராம அலுவலர்கள் 1983ஆம் ஆண்டிற்கு பின்னர் நியமனம் பெற்றவர்களாக இருக்கின்றமையினால் தகவல்களை திரட்டுவதில் தாம் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக கிராம அலுவலர்கள் சுட்டிக்காட்டினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .