2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விடுதலை

A.P.Mathan   / 2013 ஜூன் 14 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
 
அறிவுநகர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நபர் கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதப் பயிற்சி வழங்கியமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்க மறுத்த குற்றசாட்டில் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
மேற்படி வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நிதிமன்றில் நடைபெற்ற பின்னர், 10ஆம் திகதி டிசெம்பர் மாதம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு தொடர் விசாரணை இடம்பெற்றது.
 
மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் மேற்படி நபரை நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .