2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் கட்டிட நிர்மாணத்துக்கு அனுமதி வழங்க விரைவு சேவைப்பிரிவு

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், -சுமித்தி தங்கராசா


யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விரைவு அனுமதி வழங்கும் சேவைப்பிரிவு இன்று திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமைய அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் முன்னைய காலத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்பதுடன் விசேட கட்டணமும் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .