2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஊஞ்சல் மரம் முறிந்ததில் சிறுவன் பலி

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஊஞ்சலில் கட்டியிருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். தெல்லிப்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் தனுசன் (வயது 8) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

நேற்று மாலை வீட்டில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த வேளை ஊஞ்சல் மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .