2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆசிரியையின் கைப்பை அபகரிப்பு

Kanagaraj   / 2013 ஜூன் 17 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பாடசாலை விட்டு  கணவரின் வரவுக்காக வீதியில் காத்திருந்த ஆசிரியையின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மானிப்பாய் தாவடியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சையிக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரே சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை வைத்திருந்த அவருடையை கைப்பையை பறித்தெடுத்துச் சென்றுள்ளார்கள்.

மானிப்பாய் தாவடி வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திறக்கு அருகாமையில் இடம் பெற்றது.

மோட்டார் சைக்;கிள் இலக்கத்தை மறைத்து வண்ணம் மிகவேகமாக வந்த இருவர் கைப்பையை பறித்துக் கொண்டு தாவடி சந்தியூடாக  தப்பி சென்றுள்ளார்கள்.

குறிப்பி;ட்ட சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஆசிரியையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்,சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .