2025 ஜூன் 19, வியாழக்கிழமை

எரிகாயங்களுக்குள்ளான பெண் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 18 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். குருநகர் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துள்ளார்.

யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த டனுகா (வயது 22) என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

எரிகாயங்களுக்குள்ளான நிலையில் இந்தப் பெண்  தற்போது யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .