2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாதகலில் மீன்பிடிப் படகுகள் இனந்தெரியாத நபர்களினால் எரிப்பு

A.P.Mathan   / 2013 ஜூன் 22 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
யாழ். மாதகல் பகுதியில் மீனவர்களின் மூன்று மீன்பிடிப் படகுகள் இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மாதகல் கடற்கரையில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு படகும் கடலில் நின்ற ஒரு படகும் இவ்வாறு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
 
இதில் படகு மற்றும் இதிலிருந்த வலைகள் உட்பட பல லட்சம்பெறுமதியான வலைகள் என 25 லட்சத்திற்கும் மேல் பெறுமதியானவை எரிந்துபோயுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்வத்துடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .