2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். நல்லை ஆதினம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 23 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா


யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தன் ஆதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலண்டன் வாழ் மக்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தன் ஆதினத்தை நல்லை ஆதின குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கான பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  துர்க்காதேவி அம்மன் கோவில் பிரதம குருக்கள், கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் பிரதம குருக்கள்,  உயர் நீதிமன்றத்தின்  முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம், யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .