2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவதாக பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2013 ஜூன் 25 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்களை தொலைபேசியூடாக அச்சுறுத்தி கப்பம் பெறும் நடவடிக்கைககள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இது குறித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்தார்.

யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தகர்களிடம் கடந்த இரண்டு வாரங்களாக இனந்தெரியாத நபர்கள் தொலைபேசியில் மிரட்டி பல இலட்சம் ரூபக்களை கப்பம் பெற்று வருவதாக வர்த்தகர்கள் சிலர், வணிகர் கழகத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

அதன்பிரகாரம், பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த பொலிஸ் முறைப்பாட்டினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து பொலிஸார், வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வர்த்தகர்களிடம் தொலைபேசி மூலம் கப்பம் கேட்டவர்கள், வங்கி கணக்கில் பணத்தினை வைப்பிலிடுமாறும் வர்த்தகர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்படி பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்குகள், மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .