2025 ஜூன் 19, வியாழக்கிழமை

போக்குவரத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம்

Kogilavani   / 2013 ஜூன் 25 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

போக்குவரத்து செய்வதில் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வயாவிளான் குட்டியபுலம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வயாவிளான் குட்டியபுலம் பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

விவசாயப் பிரதேசமாகக் காணப்படும் இப்பிரதேசம் போக்குவரத்து வசதிகளற்ற கிராமமாக காணப்படுகின்றது. 

பலாலி வீதிக்கும் பருத்தித்துறை வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இப் பிரதேசம் காணப்படுகின்றது. இப்பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பயணம் செய்யவேண்டுமானால் கிழக்கே பருத்தித்துறை வீதிக்கோ அன்றி மேற்கே பலாலி வீதிக்கோ வரவேண்டும்.

இந்த வீதிகள் இரண்டும் சுமார் நான்கு, ஐந்த கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையோ அன்றி தனியார் மினிபஸ் சங்கத்தினரோ நாளாந்தம் மூன்று சேவைகளை காலை, மதியம்; பிற்பகல் நடத்தினால் கூட பெரும் நன்மையாக இருக்கும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .