2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசு ஒத்துழைக்கிறது: ஆஸி. உயர் ஸ்தானிகர்

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இங்கு மேற்கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும் இலங்கை அரசாங்கமானது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது என்று  இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
றொபின்மூடி தெரிவித்துள்ளார்

யுத்தத்தினால் வடக்கின் கடற்தொழில் உட்கட்டமைப்புக்கள் பெரும்; பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது இதனால் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட பாசையூர் இறங்கு துறையை திறந்துவைத்து உரையாற்றும் போதே இதனை அவர் தெரிpவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ளவதில் பெருமகிழ்சி அடைகின்றேன்  பல வருடகால யுத்தத்தின் காரணமாக மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் பாதிப்படைந்துள்ளன இதன் காரணமாக மக்கள் பாரிய துன்ப துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வடமாகணத்தில்  32 ஆயிரம் மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், யாழ் மாவட்டத்தில் மட்டும் 60 வீதமானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான மீன்பிடித்துறை இறங்கு துறைகளை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி  அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு பிள்ளைகளின் எதிர்கால கல்வி சிறக்கவும் உழைக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்து இங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் சகல அபிவிருத்தி நடவடிக்கை களுக்கும் இலங்கை அரசாங்கமானது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது இந்த ஒத்துழைப்பின் காரணமான இந்த புனரமைப்பு பணிக்கு 58 மில்லியன் ரூபா கிட்டத்தட்ட 456 ஆயிரம் அவுஸ்ரேலியன் டொலர்களை வழங்கியுள்ளது என்றார்.

இந்த சிறந்த திட்டத்திற்கு அவுஸ்ரேலிய மக்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது அந்த மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய ஒரே ஒரு கைமாறு என்ன? என்றால் இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி மக்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் அதனை இந்த கையாற்றைச் செய்யமுடியும் என்றார்.

அத்துடன், இலங்கையில் மேம்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .