2025 ஜூன் 19, வியாழக்கிழமை

விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர்: நகர சபை தலைவர்

Super User   / 2013 ஜூன் 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ் மாவட்டத்தில் விபச்சார நடவடிக்கையை பொலிஸார் ஊக்குவிக்கின்றனர் என சாவகச்சேரி நகர சபை தலைவர் தேவசகாயம் பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பதிவு செய்யப்பாட விடுதிகள் மற்றும் சமூகர் சீர்கேடான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும்போதே இதனை அவர் சுட்டிக்காட்டினார்.

"அண்மையில் சாவகச்சேரி பிரதேசத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் ஆணும் விடுதிகளில் தங்குவது தடையில்லை என்று பொலிஸ் தரப்பினால் தொவிக்கப்பட்டது.  பொலிஸாரின் அந்த கருத்து யாழ் மாவட்டத்தில 18 வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்காதது விபச்சாரத்தை ஊக்கப்படுத்தும் ஆலோசனையாகவே இது அமையும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த யாழ் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி,

"யாழ் மாவட்டத்தில் 40க்கு மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட இருவர் தங்கள் சுயவிருப்பின் பேரில் தங்கியிருந்தால் அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கமுடியாது. அவர்களின் சுயமரியாதையினையும் கருத்தில் எடுக்க வேண்டும் இவ்வாறான சம்பவங்களுக்கு பொலிஸார் துணைபோகீறார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது" என்றார்.

அத்துடன் யாழில் நடைபெறுவதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது விபச்சாரத்திற்கும் இங்கு நடைபெறும் சம்பங்களுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .