2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தெல்லிப்பளையில் குழாய்க்கிணறுகள் பொருத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜூன் 27 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட எட்டுக் குழாய் கிணறுகளுக்கும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் நீர்ப்பம்பி பொருத்தப்படவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட கிளைத் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தொவித்துள்ளார்.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் நீர்ப்பம்பிகள் பொது இடங்களில் பொருத்துவதினால் குறுகிய காலத்தில் பழுதடைந்து விடுவதுடன் அதனை மீண்டும் யாரும் திருத்தி பயன்படுத்தும் நிலமையும் காணப்படுவதில்லை.

இதனால் தேவையற்ற முறையில் நிதி பயன்பாடு அற்ற தன்மை ஏற்படுவதுடன் பணம் செலவு செய்தும் பொது மக்கள் பயன்பெற முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

இத்தகைய நிலமையை போக்கும் வகையில் இலங்கை நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையுடன் தொடர்பு கொண்டதன் பெயரில் தரமான கைப்பம்மை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து பொருத்துவதன் மூலம் ஐம்பது வருடங்களுக்கு குறிப்பிட்ட நீர்ப்பம்பிகள் பழுதடையமாட்டாது எனவும் அதற்க்கு உத்தரவாதம் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கைப்பம்முக்கு சுமார் ஒரு லட்சத்தி இருபத்தையாயிரம் ரூபா செலவிடுவதாகவும் விரைவில் குறிப்பிட்ட எட்டுக் குழாய் கிணறுகளுக்கும் கைப்பம்கள் பொருத்தப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு விடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை விட திறந்த கிணறுகள் இருபத்தெட்டு புனரமைப்ப செய்யப்பட்டு பொது மக்களுடைய பாவனைக்கு விடப்பட்டுள்ளதாகவும் திறந்த கிணறுகளுக்கும் தலா தொன்னூறாயிரம் ரூபா வீதம் இருபத்தைந்து இலட்சம் ரூபாவும் குழாய் கிணறுகள் எட்டுக்கும் பதினாலு இலட்சம் ரூபாவுமாக நாற்பத்தொன்பது இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாகவும்  தொவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .