2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். பொது சுகாதார பரிசோதகர்கள் கட்டாயம் சீரூடை அணிய வேண்டும்: ஆணையாளர்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சொரூபன்

யாழ். மாநகர சபையில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சபையின் ஆணையாளர் செ. பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, சுகாதார பரிசோதகர்கள் பணியின் போது சீருடை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டினை  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர் இதனையடுத்தே ஆணையாளர் மேற்படி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சீரூடை இன்றி சோதனைகளில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு சீருடை இன்றி சோதனையில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றார்.

மேலும், மாநகர சபை எல்லைக்குள் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு  முன்பெல்லாம் 4 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது ஒரு நாளில் அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த அனுமதி இலங்கையில் எந்தவொரு சபையினாலும் வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இருந்தும் யாழ். மாவட்டத்தில் அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், 450 இடங்களில் கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு  எச்சரிக்கை கடிதம் (சிவப்பு நோட்டீஸ்) வழங்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையினால் தற்போது இந்தவொரு நடவடிக்கை மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .