2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பீதியில் மக்கள்

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா 

காட்டு யானைகளில் அட்டகாசாம் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விசுவமடு, தொட்டிலடிப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் இரவு வேளைகளில் 10 இற்கும் மேற்பட்ட யானைகள் பொதுமக்களில் இருப்பிடங்களுக்குள் நுழைந்து தென்னந்தோட்டங்கள், பயிர் வகைகளை நாசம் செய்வதாவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இரவு வேளைகளில் கூட்டமாக வரும் இந்த யானைகள் பொது மக்களுடைய தென்னம் தோட்டங்களை அழிப்பதுடன் வரும் பாதையில் உள்ள பயிர் வகைகளையும் அழித்து நாசம் செய்துவிட்டு செல்லுகின்றன.

இதுதொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ள போதிலும் இது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாததினால் தமது இரவு நேரங்கள் அச்சத்துடன் கழிவதாக அம்மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .