2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வாழ்க்கைத்தரம் உயர்ந்தவர்களின் சமுர்த்தி முத்திரைகளை நிறுத்த ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்த சமுர்த்திப் பயனாளிகளின் சமுர்த்தி நிவாரண முத்திரைகள் நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை அப்பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் முத்திரைகளை மீளாய்வு செய்யும் செயற்பாடுகள் கடந்த வாரம் முதற்கட்டமாக  மேற்கொள்ளப்பட்டது.

கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக  இம்மீளாய்வை உதவித் திட்டப் பணிப்பாளர் மற்றும் சமுர்த்தி ஆர்வலர்கள், சமுர்த்தி முகாமையாளர்களை உள்ளடக்கிய குழு மேற்கொண்டது.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 1,881 சமுர்த்திப் பயனாளிகள் சமுர்த்தி முத்திரைகளை பெற்றுவருகின்றனர். 

இவர்களில் கடந்த காலத்தில் அரசாங்கத் தொழிலைப் பெற்றவர்கள், குடும்ப மட்டத்தில் வருமானம் அதிகரித்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்களென பலருடைய வருமான மட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மறுபக்கம் தொழில் இழந்தவர்கள், குடும்பத் தலைவனை இழந்து வருமானமின்றியுள்ளவர்கள்  காணப்படும் நிலையில் இத்தகைய மீளாய்வின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடையக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .