2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி முனையில் கொள்ளை; இருவருக்கு பிணை

Menaka Mookandi   / 2013 ஜூலை 02 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அல்லாரை தெற்கு, கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கியைக் காட்டி நகைகள் உட்பட ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரினால் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இம்மூவரில் இருவர் தொடர்பான பிணை மனு யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வேளை, மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் எஸ்.பரமராஜா அவ்விருவருக்கும் பிணை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .