2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல்

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ். சொரூபன்

யாழ். பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மந்திகை வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே இவருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வைத்தியசாலையில் 3 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பெற்றுகொண்ட நிலையில் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .