2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இராணுவ பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் கையளிக்கப்படும்: ரெமீடியஸ்

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் இராணுவத்தினரின் பாவனையில் உள்ள வீடுகள் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் தெரிவித்தார்.

512 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. அச்சந்திப்பின் போதே இராணுவ பாவனைக்குள்ளிருக்கும் வீடுகளை கையளிப்பதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனடிப்படையில், அரியாலை 512 ஆவது படை பிரிவு இராணுவ முகாம் உள்ள 28 வீடுகளை எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கையளிப்பதாகவும் கொழும்புத்துறை இராணுவ முகாம் அமைந்துள்ள வீடுகளை அடுத்த மாதம் கையளிப்பதாகவும் 512வது படை பரிவின் தளபதி உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .