2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் ஏழு வலயங்கள் பிரிக்கப்பட்டு ஜுலை 1 முதல் 7 வரை வட்டார ரீதியாக நுளம்புக்கட்டுபாட்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நாட்களில் சகல நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலை, பொது இடங்கள் வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள், பராமரிப்பற்ற காணிகள் போன்றவற்றில் நுளம்புக்கட்டுப்பட்டுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக நாட்குறிக்கப்பட்ட இடங்களுக்கு சுகாதார தொண்டர்கள், சுகாதாரக் கழக உறுப்பினர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள் சென்று வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .