2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மஹரகமவிலிருந்து தெல்லிப்பழைக்கு பாதயாத்திரை

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.சிவகருணாகரன்

மஹரகம புற்றுநோய்ச் சிகிச்சை நிலையத்திலிருந்து தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஊ.ஊ.ஊ பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த மூவர் அடங்கிய குழுவினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், புற்றுநோய்ச் சிகிச்சைக்கான ஆதரவைத் திரட்டுவதும் இந்தப்பாத யாத்திரையின் நோக்கம் என இந்தக் குழுவினர் தெரிவித்தனர்.

இன்று காலை கிளிநொச்சியை வந்தடைந்த இந்தக் குழுவினர் மேலும் தெரிவிக்கும்போது,  'வடக்கிவிலிருந்து மஹரகமவிற்கு புற்றுநோய் சிகிச்சை பெற வருவோர் எதிர்காலத்தில் வடக்கிலேயே சிகிச்சையைப் பெறக்கூடிய மாதிரியான ஒரு வைத்தியசாலையை வடக்கில் அமைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தப் பாதயாத்திரையைத் தாம் மேற்கொள்வதாக கூறினர்.

இன்று காலை கிளிநொச்சியில் சில கிராமங்களுக்கு விஜயம் செய்த இந்தக்குழுவினர், பின்னர் அங்கிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றனர். அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலையை சென்றடையவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .