2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா


மஹிந்த சிந்தனையின் கீழான  'சிசுதிரிய' வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் வருமானம்  குறைவாகப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான  ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள 500 பாடசாலை மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.   5,000 ரூபா  வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .