2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஜூலை 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


மஹிந்த சிந்தனையின் கல்வி விரிவாக்கற் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடவிதானம் வட மாகாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்.வசாவிளான் மகா வித்தியாலயத்தில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் சந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்திற்காக வட மாகாணத்திலிருந்து 39 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக இந்த பாடம் இன்று யாழ்.வசாவிளான் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஆளுனரின்  செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாயர் சத்தியசீலன், கல்வி அமைச்சின்  தமிழ் மொழிப் பாடசாலைகளின் பணிப்பாளர் முரளிதரன், மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் இராதா கிருஷ்ணன், 515 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சிசாந்த மனப்பே  உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .