2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'மத ரீதியான எதிர்ப்புக்களை தடுக்க இந்திய முன் வரவேண்டும்'

Super User   / 2013 ஜூலை 16 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நாட்டில் மத ரீதியாக வருகின்ற எதிர்ப்புக்களை தடுக்க இந்திய முன்வர வேண்டும் என்று இந்து மாமன்றத்தின் உப தலைவர் ஆறுதிரு முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நல்லூரில் நேற்று  திங்கட்கிழமை நடைபெற்ற சுவாமி விபுலாந்தர் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"ஒரு  நாட்டில் மொழி சுதந்திரம்இ மதச் சுதந்திரம்இ மனித நேயத்திற்கு போன்றவற்றில் மனிதன் சுதந்திரமாக வாழ வேண்டும். இவை மூன்றும் இல்லாத நாட்டில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். ஆன்மீகத்தைச் சார்ந்தவர்கள் அரசியல் பேசுவதில்லை. நான் இங்கு அரசியல் பேசவில்லை. ஆத்மாக்களின் உரிமையைப் பேசுகின்றேன். எங்களது நாட்டில் மிகத்துன்பமான நிலை இப்பபோது ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வட கிழக்கு பகுதிகளில் ஆலயங்கள் தாக்கப்படுவது வீக்கிரகங்கள் களவாடப்படுவது போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இவை அரசாங்கத்தின் துணையுடனே நடைபெறுகின்றது. கிழக்கிலே இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. ஆலயங்கள் இடிக்கப்படுவதும் இந்த இடத்தில் கொண்டு வந்துவேறு ஒரு மதச் சின்னத்தினை வைப்பதும் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இதற்கெதிராக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றார்.
இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் துணையுடனேயே நடைபெற்று வருகின்றது. எங்கள் பிரச்சனையில் எங்கள் நலனின் அக்கறையுடன் செயற்படும் நாடு இந்தியா.  இந்திய துணைத் தூதுவர் இங்கு வந்திருக்கின்றார். இவ்வாறான பிரச்சனைகளில் இந்திய தலையிட்டு மதங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

பழமை வாய்ந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு இந்திய பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றதை இங்கு யாவரும் அறிவர். அதனைப் போன்று ஏனைய ஆலயங்களுக்குனும் மத ரீதியாக ஏற்படுகின்ற எதிர்ப்பை தடுத்து பாரம்பரிய இந்து மத்தினையும் மக்களையும் பாதுகாத்து இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க இந்திய முன்வர வேண்டும்" ஏன்றார்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த யாழிலுள்ள இந்திய கொன்ஸியூலர் ஜெனரல், "இந்த பிரச்சனை தொடர்பில் தான் கவனத்தில் எடுப்பதாகவும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்" இதன்போது உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .