2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

போலி நாணயத் தாள்களுடன் கைதான மூவருக்கும் பிணை

Super User   / 2013 ஜூலை 18 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

போலி நாணயத்தாள்களுடன் கைதாகிய மூவரையும் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு.எல் விக்கரமராட்சி தெரிவித்தார்.

500 ரூபா நாணயத் தாளுடன் யாழ். காந்தி ஜீ வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு எரிபொருள் நிரப்புநரிடம் பணத்தினை செலுத்தும் போது, 500 ரூபா நாணயத்தாள் போலியானது என எரிபொருள் நிரப்புநர் இருவரையும் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த 500 ரூபா தாளினை வழங்கிய நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் நேற்றைய தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை, யாழ். நீதிவான் பொ.சிவகுமார் மூவரையும் தலா 1 லட்சம் காசுப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .