2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வேட்பாளர்களை பங்கிடுவதில் கூட்டமைப்பிற்குள் குழப்பம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 18 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான தீர்மானத்தினை எடுக்கமுடியாத நிலையில் மீண்டும் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் கூடிய தேர்தல் நியமனக் குழுவினர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன் உட்பட வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இரண்டாம் நாளான இன்று மீண்டும் கலந்துரையாடினர்.

சுமார் 3 மணித்தியாலயங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 5 கட்சிகளில் இருந்தும் வேட்பாளர் தெரிவு செய்வதில் குழப்பநிலை ஏற்பட்டதால் மீண்டும் நாளை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேலும் கூறினர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேட்பாளர் தெரிவு மற்றும் கட்சிப்பங்கீடு போன்ற வற்றில் அனைத்துக்கட்சிகளும் இணக்கப்பட்டுக்கு வந்துள்ளதுடன் யாழ் மாவட்டத்தில் அங்கத்துவக் கட்சிகளின் பங்கீடு தொடர்பில் இழுபறி நிலை காணப்படுவதால் இறுதித்தீர்மானம் எடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இந்த தேர்தலில் தொடர்பில் போட்டியிடுவதற்கு கட்சிகளுக்கு நேற்றைய கலந்துரையாடலில்  தமிழரசுக்கட்சிக்கு 9 பேரும், சுரேஸ்பிறேமச் சந்திரனின் ஈபிஆர்எல்எப் சார்பில் 4 பேரூம் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 3, ரெலோ அமைப்பின் சார்பில் 3 பேரூம் புளொட் அமைப்ப்பின் சார்பில்  2பேரூம் என்று  கட்சிப் பங்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதனை சில கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இறுதித்தீர்மானம் எட்டமுடியாததை அடுத்து கூட்டம் நிறைவு பெற்றது.

You May Also Like

  Comments - 0

  • Murugan Thursday, 18 July 2013 02:47 PM

    ஐயா சாமி, கூட்டமைப்பினுள் கூத்தா? வேண்டாம் ஐயா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .