2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 23ஆம் திகிதி காலை 8.30 மணிமுதல் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

அரசாங்கத்தின்  அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக பிரதேச ஊடகவியலாளர்களை அறிவூட்டும் வகையில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.

தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவடடங்களில்மேற்க்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி செயல் திட்டங்கள் சம்பந்தமான அறிவூட்டலை மேற்கொள்ளும் வகையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

அரசாங்க தகவல் தினைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ள வளவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .