2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அரசாங்கம் தோற்றுப்போவதற்காக வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லை: சுசில்

Kogilavani   / 2013 ஜூலை 19 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

'வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தோற்றுப்போவதற்காக நடத்தவில்லை. இந்த தேர்தலில் 19 பேர் போட்டியிடவுள்ளனர்.  இந்த தேர்தலில் நாங்கள் போட்யடியிடுவது தோற்றுப்போவதற்கு அல்ல. அதேபோல் வெற்றி பெறுவது சமாதானத்தினையும் நீதியையும் நிலைநாட்டவே' என சுற்றாடல்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சுசில்பிரேமஜயந்த தெரிவிததார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துiயாடலில் ஈடுபட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடமாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லை என்று சிலர் தெரிவித்து வருகின்றனர்.   ஆனால், இங்குள்ள தேசியப் பாடசாலைகளைத் தவிர பல்வேறு பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று பல வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

வட மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இல்லாத போதும் ஜனாதிபதி ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

மாகாண சபையில் துரித அபிவிருத்தியை மேற்கொள்ளவேண்டும் என்றால் ஆளுங்கட்சியைப் பலப்படுத்துவதன் மூலமே அது சாத்தியப்பாடானது' என்று அவர் தெரிவித்தார்.
 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .