2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வாழ்வின் எழுச்சி திட்டம் தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழான செயற்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. 

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமை தாங்கினார்.

இதன்போது அமைச்சினதும், அமைச்சின் நிறுவனங்களினதும் ஏனைய நிறுவனங்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக ஆராய்ந்தறிந்து கொண்டார்.
 
குறிப்பாக தொழிற்துறை சார்ந்தோருக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் உபகரணங்கள், உற்பத்தி மற்றும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, அவற்றினது தொழிற்துறை மேம்பாடு தொடர்பிலும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் கைத்தொழில்துறைகளை மேலும் விரிவாக்கும் வகையில் திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்த அமைச்சர் வங்கிகள் ஊடான கடன்திட்டங்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் ஏ - 9 வீதியில் ஒமந்தை பகுதியில் தேசிய அருங்கலைகள் பேரவைக்கான காட்சி மற்றும் விற்பனை கூடத்தை அமைப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில், வவுனியா பிரதேச செயலர் உதயகுமார், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரகு ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .