2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வட மாகாணசபை தேர்தல்; ஐ.ம.சு.மு, ஈ.பி.டி.பி, அ.இ.மு.க இணைந்து போட்டி

Menaka Mookandi   / 2013 ஜூலை 19 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியுடன் அமைச்சர் சுசில் பிமேரஜயந்த இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு இன்று மதியம் 1 மணிக்கு அக்கட்சியின் யாழ். மாவட்ட
அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரும் பிரத்தியேக செயலாளருமான கே.என்.தயானந்தா மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் றொபின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • AMBI. Saturday, 20 July 2013 04:57 AM

    அ.இ.மு.க. முன் கதவால் முஸ்லிம் மக்களை காட்டி கொடுக்கிறது, ஆனால் மு.கா பின் கதவால் முஸ்லிம்களை காட்டி கொடுக்கிறது. பொதுவாக இரண்டுமே ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். முகாவை விட அ இ மு க‌ பரவா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்???

    Reply : 0       0

    pilaman Saturday, 20 July 2013 06:18 AM

    அதனை அமைச்சர் சொல்லித்தான் தெரியவேண்டுமா சந்திரகுமார் எம்பி வெற்றி கொடுக்கும் போதே தெரிகிறதே

    Reply : 0       0

    kavi Saturday, 20 July 2013 01:24 PM

    முப்பது வருடகால யுத்தத்தால் அனைத்து இனமக்களும் இனி அப்படி ஒரு நிலைக்குச் செல்ல தயாராக இல்லை. கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் வாழும்போது இங்கு வாழும் மக்கள் அவர்களின் அரசியலுக்கு பலிக்கடா ஆகிறார்கள். அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மட்டுமே மக்களுக்கு தேவையானவற்றைச் செய்யமுடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .