2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகிறேன்: ஆனந்தசங்கரி

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வேட்பாளர் தெரிவில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பாத காரணத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித்து உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகவியலாளரைச் சந்தித்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தலில் எமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் போதியளவு திருப்தி இல்லாதபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எம்மால் குழப்பம் வரக் கூடாது என்ற நோக்கில் கூட்டமைப்பின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இக்கூட்டத்தில் நமது கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.

இந்த தேர்தலில் போட்யிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கான பிரசார நடவடிக்கையில் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் எவ்வாறு பிரசாரங்களில் கலந்தகொள்ளப்பபோகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .