2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஜன செத பெரவமுன யாழில் வேட்பு மனு தாக்கல்

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜன செத பெரவமுன இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது.

கட்சியின் தலைவர் வண.பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினரே வேட்பு மனுவை யாழ் அரச அதிபர்; சுந்தரம் அருமைநாயகத்திடம் இன்று கையளித்னர்.

வடமரசாட்சியைச் சேர்ந்த கணேச மூர்த்தி ஜெயச்சந்திரன் என்பரை முதன்மை வேட்பாளராக்கொண்டு தமிழ் சிங்கள முஸ்லிம் என மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இக் கட்சி சார்பாக வவுனியா மற்றும் மன்னார்  ஆகிய மாவட்டங்களிலும் நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .