2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

போலி நகைகளை அடகு வைக்க முயன்ற நால்வர் கைது

Kanagaraj   / 2013 ஜூலை 26 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

போலி ஆபரணங்களை சுமார் 70 லட்சம் ரூபாவிற்கு வங்கியியொன்றில் அடகு வைக்க முயன்ற நால்வரை நெல்லியடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நெல்லியடி பகுதியில் உள்ள மக்கள் வங்கிக்கு நேற்று சென்ற நால்வரும் ஒருதொகுதி நகைகளை கொடுத்து அதற்கு சுமார் 70 லட்சம் ரூபாவை கேட்டுள்ளனர்.

நகைகளை உரசிபார்த்த வங்கி அடகுபகுதி முகாமையாளர் அவை தங்கமுலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதனை கண்டறிந்துகொண்டார்.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து வங்கிக்கு விரைந்த பொலிஸார் நால்வரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நான்கு பேரில் ஒருவர் மலேசியா நாட்டில் இருந்து வந்தவர் என்றும் ஏனைய மூவரும் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

அத்துடன், வெவ்வேறு வங்கிகளில் அடகு வைத்த சுமார் 47 பற்றுச் சீட்டுக்கள் அவர்களிடமிருந்து மீட்டுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸார் கூறினார்.

அதேவேளை, கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும், மீட்கப்பட்ட 47 வங்கி பற்றுச் சீட்டுக்களையும், காங்கேசன் துறையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விNஷட அதிரடி படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதிரடி படையினரின் விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .