2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பருத்தித்துறையில் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


யாழ். பருத்தித்துறை நகரத்தில் சுரங்கப் பாதையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்கரைக்குச் செல்லும் வீதியிலேயே இந்த சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணியின் போது இந்த சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்குரிய பாதையாக இது காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த சுரங்கப்பாதை எந்தக் காலத்திற்குரியது, யார் இதனைப் பயனப்படுத்தினார்கள் என்ற தகவல்கள் இதுவரை இல்லாத போதும் இதனை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .