2025 ஜூன் 21, சனிக்கிழமை

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வு

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து நேற்று புதன்கிழமை ஆராயப்பட்டுள்ளது.

வலி வடக்கு மாவை கலட்டி மற்றும் நகுலேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம்  செய்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் குறித்த பகுதி மக்களைச் சந்தித்து தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தின் குடிநீர் வசதிகள், வீடமைப்பு, மின்சாரம், வீதிப்புனரமைப்பு போன்ற பல்வேறு  விடயங்கள் குறி;த்து இங்கு ஆராயப்பட்டுள்ளது

நகுலேஸ்வரம் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் அப்பகுதி மலசலகூடம் அமைப்பதில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பகுதி கல்லுப் பூமி என்ற காரணத்தினால் மலசல கூடத்தின் குழி அமைக்க முடியாதுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ள எற்பாடு செய்யுமாறு பொதுமக்களினால்  கோரிக்கை விடுத்தனர்.

கனரக வாகனங்களை பயன்படுத்துவது சட்டவிரோதமான விடயமாக இருப்பதால் இது குறித்து ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்திற்கு முன்னால் உள்ள கீரிமலை பிரதான வீதிக்கு வடக்குப் பக்கமாக மலக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கேரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிறிமோகன் , ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க. கமலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .