2025 ஜூன் 21, சனிக்கிழமை

கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்ல புதிய வீதி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.கீரிமலை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்வதெற்கென புதிதாக அமைக்கப்பட்ட வீதி எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னதாக பொது மக்களின் பாவனைக்காக மீளக்கையளிப்பதாக படைத்தரப்பு உறுதியளித்துள்ளது.

குறித்த ஆலயத்திற்கச் செல்லும் வீதி நீண்ட காலமாக கடற்படையினரின் பாவனையில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருப்பதால் இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கு புதிய பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதை எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்பதாக செப்பனிடப்பட்டு ஆலயத்தின் பயன்பாட்டிற்கு கையளிப்பதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த ஆலயத்திற்கான மின்சார விநியோகத்தை கடற்படையினர் வழங்கி வந்தனர். தற்போது கடற்படையினர் மின்விநியோகத்தை நிறுத்தியுள்ளதால் குறித்த ஆலயத்திற்கு மின்விநியோகம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .