2025 ஜூன் 21, சனிக்கிழமை

நிலாவரையிலிருந்து அராலிக்கு குடிநீர் விநியோகம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், 
சுமித்தி தங்கராசா
 
நிலாவரையிலிருந்து அராலிக்கு குழாய் வழியூடாக குடிநீரை கொண்டு செல்லும் திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது. இக்குழாய் வழியூடான 21 கிலோ மீற்றர் நீளம் தூரம் கொண்ட நீர் விநியோகத் திட்டத்தின் ஊடாக எட்டு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
முன்னர் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதி மறுத்திருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியை அடுத்து தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் செனரத் திஸநாயக்காவுடன் கலந்துரையாடி இதற்கான அனுமதியை பெற்றுள்ளார்.
 
இந்த குடிநீர் விநியோகத்திட்டத்தினை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதனிடையே அப்பகுதியில் புதிதாக நீர்ப் பம்பிக்கான அமைவிடமொன்றை அமைப்பதற்கும், தொல்பொருள் திணைக்கள பிராந்திய பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிலாவரை கிணற்றை சூழவும் கம்பி வலையை அடிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .