-சுமித்தி தங்கராசா
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை கிராம மட்டத்தில் எதிர்வரும் இரு வாரங்களில் ஆரம்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த வலியுறுத்தினார்.
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தல் ஆரம்ப பிரசார நடவடிக்கையினை இன்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் 10 வாக்காளர் பிரிவுகளும் 542 வாக்களிப்பு நிலையங்களும் உள்ளன. அதில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும், எதிர்வரும் இரு வாரங்களில் தோதல் பிரசாரத்தினை வேட்பாளர்களை ஆரம்பிக்குமாறு கூறினார்.
அத்துடன், செப்டெம்பர் 21ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளதால், கடைசி இருவாரங்களில் பாரிய பிரசார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், யாழ். மாவட்டத்தில் இறுதியாக நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுமென்றும் அவர் மேலும் கூறினார்.