2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லூர் ஆலய சூழலில் தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்க்கவும்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். நல்லூர் ஆலய சூழலில் தங்க நகைள் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ். பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து வருதல், மற்றும் பெறுமதிமிக்க உபகரணங்களை எடுத்து வருதல் என்பவற்றினை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், கடந்த உற்சவங்களின் போது, ஆலய வளாகத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றால், காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவர்களா? என்பதை பொலிஸாருக்கு அடையாளப்படுத்துமாறும் யாழ். பொலிஸார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .