2025 ஜூன் 21, சனிக்கிழமை

பயணப் பொதியினை திருடிய இருவர் கைது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பஸ் நிலையத்தில் பயணி ஒருவரின் பயணபொதியினை திருடிய குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பஸ் நிலையத்தில் நேற்று இரவு பயணம் மேற்கொள்ள வந்த பயணி ஒருவர் தனது பயணப் பொதியினை தலைமாட்டில் வைத்து விட்டு உறங்கிய வேளையில், பஸ் நிலையத்தில் நின்ற இருவர் பொதியினை திருடிச் சென்றுள்ளனர்.

பொதியினை திருட்டுக் கொடுத்த பயணி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை தொடர்ந்து யாழ். நகரப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவரும் விசாரணையினைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .