2025 ஜூன் 21, சனிக்கிழமை

இத்தாவிலில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான காணி உறுதி விரைவில்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த இத்தாவில் மற்றும் கரந்தாய் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காணி சீர்திருத்த
ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பூநகர் இத்தாவில் மற்றும் வெட்டுக்காடு, கரந்தாய் பிரதேசத்தில் 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியமர்ந்துள்ளார்கள்.

இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணி உறுதிகளின்றி இருக்கின்றார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு காணி உறுதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த பகுதி மக்களுக்கான இந்திய வீட்டுத் திட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 65 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஏனைய உதவித் திட்டங்களை பெறுவதற்காக தற்காலிக காணி உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில், நிரந்தர காணி உறுதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் மேற்கொண்டு வருகின்றதாகவும், காணி உறுதிபத்திரங்கள் விரைவில் வழங்கப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .