2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழில் நான்கு இளைஞர்கள் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட 4 இளைஞர்களையும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .