2025 ஜூன் 21, சனிக்கிழமை

விபத்தில் சீன பிரஜை படுகாயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மோட்டார் சைக்கிள் மோதியதில் சீன பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ். நீர்வேலி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல்  இந்த விபத்து இடம்பெற்றது.

லீஜின் சுங் (வயது 28) என்ற சீன பிரஜையே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி அபிவிருத்திப் பணிகள் யாழ். நீர்வேலி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வீதி அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டுக் கொண்டு நின்றபோதே அந்த வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் குறித்த சீன பிரஜை மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சீன பிரஜை தலையில் படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .