2025 ஜூன் 21, சனிக்கிழமை

தென்பகுதி குடும்பஸ்தர் கொலை; மற்றுமொருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தென்பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை அடித்துக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில்  மற்றுமொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார்.

கடந்த வாரம் விழுந்து காயங்களுக்குள்ளாகியதாக கூறி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குருநாகல் பகுதியைச் சேர்ந்த அப்புகாமி நிஷாந்த (வயது 42) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் உடற் கூற்று பரிசோதனையை  மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி  குறித்த நபரின் கையில் வெட்டுக் காயங்களும் தலையில் அடிகாயமும் காணப்படுவதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இவர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கான நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் வேலை செய்து வருகின்றார் என்றும் கொழும்புத்துறை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், குறித்த நபரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு குறித்த நபர் தங்கியிருந்த நண்பனின் தாயார் மற்றும் தந்தையாரிடம் விசாரணை மேற்கொண்டபோது சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவி இருவரை கைதுசெய்துள்ளனர்.

இதே இடத்தைச் சேர்ந்த மற்றுமொருவரையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்களை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .